Sunday 1 May 2016

மக்களே மகிழ்ந்து கேண்மின்!

அருள்மிகு திருக்கோணேஸ்வர நாதர்
வணக்கப் பாமலர்
- இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன் - [எனது தந்தை]

வாழ்வின் பயன்பெரும் பணமென்று சாதிக்கும்
           மக்களே மகிழ்ந்து கேண்மின்
வாழப் பெரும்பணம் வேண்டுமோ அன்றியே
           வளர்பண்பு வேண்டுமோ சொல்
ஏழேழு தலைமுறை இழிவைத் தரும்வசை
           இயற்றும் பெரும் பணங்காண்
ஏதேனும் மற்றவர்க் கீயா திருப்பினும்
           இகழா திருத்தல் நன்று
பாழான பணமுளார் பலரையுந் தூஷிப்பர்
           பசித்தவர் முகங்கள் பாரார்
பணமென்ற மமதையில் தம்நிலை மறந்திடுவர்
           பரம்பொருள் தனயு மெண்ணார்
வாழ்வாங்கு வாழவே வளர்கல்வி அன்புடன்
           வண்மையுள மனது வேண்டும்
வடிவாம்பிகை கேழ்வ மாதுமை மணாளனே
           வழங்குகோ ணாசல வள்ளலே
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment