Friday 15 April 2016

அடிசில் 97

வாழைப்பூ வறை
- நீரா -

தேவையான பொருட்கள்: 
வாழைப்பொத்தி [பூ]  -  1
துருவிய தேங்காய் பூ  - 1 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள்  -  ½ தேக்கரண்டி
மஞ்சள்தூள்  -  ¼ தேக்கரண்டி
வெங்காயம்  -  1
பச்சைமிளகாய்  -  3 
ஒடித்த செத்தல்மிளகாய்  -  2
கறிவேப்பிலை  -  கொஞ்சம்
கடுகு  -  ½ தேக்கரண்டி
சீரகம்  -  ½ தேக்கரண்டி
எண்ணெய்  -  ½ மேசைக்கரண்டி
உப்பு  -  தேவையான அளவு

செய்முறை: 
1. ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு அதில் அரைக் தேக்கரண்டி உப்புப் போட்டு வைக்கவும்.
2. வாழைபொத்தியின் காய்ந்த மேல் மடல்களை நீக்கி, அடித்தண்டில் பிடித்துக் கொண்டு நுனியைச் சுற்றிக் கொத்திக் குருணலாக வெட்டி எடுத்து உப்புக்கலந்த நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவிடவும்.
3. பின்னர் நீரில் கழுவிப்பிழிந்து எடுத்து, தேங்காய்ப்பூ, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், அளவான உப்புச் சேர்த்துப் பிசிரி வைக்கவும்
4. வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மூன்றையும் குறுணலாக வெட்டவும்.
5. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகைப்போட்டு வெடித்ததும் சீரகம், செத்தல் மிளகாய், வெட்டியவெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
6. தாளிதம் பொன்னிறமாக வரும் பொழுது, பிசிரி வைத்துள்ள கலவையை இட்டுக் கிளரி, சிறிது தண்ணிர் தெளித்து மெல்லிய நெருப்பில் வேகவிட்டு, நீர்த்தன்மை அற்று வற்றியதும் இறக்கவும்.

குறிப்பு:
குறுணலாக வெட்டி எடுக்கும் வாழைப்பூ கயறுபிடிக்காதிருக்க உப்புக்கலந்த நீரில் ஊறவிட வேண்டும். உப்பு நீரில் ஊறவிடுவதால் கழுவிப் பிழிந்தெடுத்தபின் போடும் உப்பைச் சிறிது குறைவாகப் போட வேண்டும்.

No comments:

Post a Comment