Thursday 28 April 2016

அடிசில் 98

அவரைக்காய் கூட்டு
- நீரா -
  


தேவையான பொருட்கள்
அவரைக்காய்  -  12
வறுத்த பயற்றம்பருப்பு  - ½ கப்
துருவிய தேங்காய் பூ  - 1 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள்  -  ½ தேக்கரண்டி
மஞ்சள்தூள்  -  ¼ தேக்கரண்டி
வெங்காயம்  -  1 சிறிதாக வெட்டியது
பச்சைமிளகாய்  -  2 சிறிதாக வெட்டியது 
கறிவேப்பிலை  -  கொஞ்சம்
கடுகு  -  ½ தேக்கரண்டி
சீரகம்  -  ½ தேக்கரண்டி
எண்ணெய்  -  ½ மேசைக்கரண்டி
உப்பு  -  தேவையான அளவு

செய்முறை: 
1. பயற்றம் பருப்பை கழுவி மஞ்சள் சேர்த்து, ஒன்றரைகப் தண்ணீர் விட்டு வேகவைத்து எடுக்கவும்
2. அவரைக் காயைக் கழுவி நார், காம்பு ஆகியவற்றை நீக்கி சிறியதாக வெட்டிக் கொள்க.
3. ஒரு பாத்திரத்தில் வெட்டிய அவரைக்காயை இட்டு மிளகாய்த் தூள், உப்பு சேர்ர்து காயை மூடும் அளவுக்கு தண்ணீர் விட்டு வேகவிடவும்.
4. தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய், சீரகம் மூன்றையும் பட்டுப் போல் அரைத்து எடுக்கவும். 
5. காய் வெந்து வரும் போது அவித்து வைத்துள்ள பயற்றைச் சேர்த்துக் கலந்து மெல்லிய நெருப்பில் வேகவிட்டு கொதிக்கும் பொழுது அரைத்த கூட்டைச் சேர்த்து வெந்ததும் இறக்கவும்.

6. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகைப்போட்டு வெடித்ததும் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, இறக்கிவைத்துள்ள அவரைக்காய்க் கூட்டோடு சேர்த்துக் கலந்து கொள்க.

No comments:

Post a Comment