Thursday 7 March 2013

பந்தங்கள் அறுத்திட வருவான்


                   பல்லவி 
பந்தங்கள் அறுத்திட வருவான் - உயர்
பைந்தமிழ் பாவினைத் தருவான் 

              அனுபல்லவி
கந்தன் என்றேற்றிடும் கற்றோர் - மனக்
கருத்தினில் நிறைந் தருள்வான்

                 சரணம்
துங்கக் கரிமுகற்கு இளையோன் - நற்
துதிபாடும் அடியார்க்கு எளியோன்
சங்கத்தமிழ்ப் பாவின் பழையோன் - இசை
சாரும் புலவோர்க்கு பெரியோன் 
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment