Saturday 23 March 2013

ஆசைக்கவிதைகள் - 58



எதால மச்சி நாவரவோ!





















மச்சான்: சுற்றிவர அக்கு வேலி
                         சூழவர அடப்ப வேலி
               எங்கும் ஒரே வேலி
                         எதால மச்சி நா(ன்) வரவோ!

மச்சாள்: அக்குவேலி மேல படங்கிட்டு
                         அடப்பவேலி கீழ கிடங்கிட்டு
               பக்குவமாய் வாரும் மச்சினரே!
                         நல்லபாம்பிருக்கு வாசலிலே!

மச்சான்: நல்லபாம்பு படமெடுத்தா  வசம்பு                         
                         வச்சிருக்கே(ன்) மச்சியரே!
               நட்டநடு சாமத்திலே தூங்காது                        
                         காத்திருப்பா(ய்) ஊசலிலே! 
                                       - நாட்டுப்பாடல் (கிடாப்பிடிச்ச குளம்)
                                                     (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
குறிப்பு:
வசம்பின் மணத்திற்கு பாம்புகள் கிட்ட வருவதில்லை. வசம்பின் மணத்திற்கு பாம்பு கிட்ட வராது என்பதை வன்னி மக்கள் அறிந்திருந்தனர். 

சொல்விளக்கம்:
அக்குவேலி - முள்வேலி
அடப்பவேலி - கிடுகால் மறைத்து அடைத்த வேலி
படங்கு - சாக்கால் ஆனது
ஊசல் - ஊஞ்சல் 

No comments:

Post a Comment