Sunday 24 March 2013

வாழி நீ! அம்மா!















கட்டிய கணவனும் கைவிட்டு ஏகினும்
பெற்றிட்ட மைந்தரும் பெருமையில் மறக்கினும்
சுற்றிய சுற்றமும் சுமையென ஒதுக்கினும் 
பெட்டியும் கட்டிலும் பெரும்பொருள் யாவும்
எட்டியும் பாரா எட்டடி நிலமிசை எழு
கொட்டிலே ஆனாலும் குடிசையே ஆனாலும்
கற்றிட்ட வித்தையால் கைவருந்தி உழைத்திடு
பெற்றியைப் பெற்றாய் வாழி நீ! அம்மா!
                                                                                  - சிட்டு எழுதும் சீட்டு 55

No comments:

Post a Comment