Tuesday 26 March 2013

நன்னகர் துலங்க வளர் கந்தவேளே!

கிளிநொச்சி கந்தவேள் வணக்கப் பாமலர்
                                      - இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன்












தன்கை வருந்தியே முயல்கின்ற வாக்கம்
          தான்பயன் பெறுமுன்னரே
தயவின்றி யிரவினிற் றுயில்விழித்தே திருடி
          தம்வயிறு கழுவு கயவர்
பொன்பொருள் பறித்துமே போகங்கள் செய்புலையர்
          போக்கிலாச் சண்டாளர்கள்
போகவிட்டே புறங் கூறித்  திரிந்திடும்
          புற்றுநோய் வாயர்களையும்
இன்பந்தரும் பெரிய கனவான்கள் போலவே
          இளித்துவாய் பகல்கழித்து
ஏழைகள் தேனியெனத் தேடு செல்வத்தை
          எத்திப்பிடுங்கும் எத்தர் 
துன்பந் துடைக்கவோ வடிவேல் பிடித்தனை
          தூக்கியழி வேலினாலே
துட்டநிக் கிரகமருள் கிளிநொச்சி நன்னகர்
          துலங்க வளர் கந்தவேளே!

No comments:

Post a Comment