Friday 3 March 2017

ஏழைகள் வாழ்வும் வளமாகும்!



விண்ணில் இருந்து துளிவீழ்ந்தால்
          வீண்ணிலம் தனிலும் நதிபாயும்
கண்ணில் இருந்து துளிவீழ்ந்தால்
          காதல் நெஞ்சில் அலைபாயும்
மண்ணில் இருந்து மரந்தளிர்த்தால்
          மாநிலம் எங்கும் உயிர்வாழும்
எண்ணில் நல்ல குணந்தளிர்த்தால்
          ஏழைகள் வாழ்வும் வளமாகும்!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment