Tuesday 14 March 2017

கோடையை ரசித்தேன் பாரினிலே!

திரிகோணமலை

மாங்கனி தூங்கும் சோலையிலே
          மானினம் துள்ளிடும் வேளையிலே
தீங்கனி பறிக்கப் போகையிலே
          தேந்துளி சிந்திடும் பூவினிலே
தேங்கனி வண்டு ஊதையிலே
         தென்றலும் வந்து மோதையிலே
கோங்கனி சிதறும் ஊரினிலே
          கோடையை ரசித்தேன் பாரினிலே
                  
இனிதே,
தமிழரசி.

கோங்கனி 

No comments:

Post a Comment