Thursday 23 March 2017

பார்த்திடத் துடிக்குது உள்மனது

Angkor Wat Temple - Cambodia  [12- 11- 12 Early Morning 05:50]

கண்ணின் நீரும் கசியுதையா
           காதலில் நெஞ்சம் கரையுதையா
எண்ணிய பொருளும் நீயலவா
           ஏதிங்கு வாழ்க்கை செப்பிடுவாய்
நண்ணியே வருவாய் நாயகனே
           நானில மீதினில் இப்போதே
பண்ணிய புண்ணியம் ஏதுமில்லை
          பார்த்திடத் துடிக்குது உள்மனது
இனிதே,
தமிழரசி.

1 comment:

  1. அருமையான வரிகள்!

    அம்மா!
    "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலை வெளியிடவுள்ளேன்.
    அதற்கொரு கட்டுரை தாங்களால் ஆக்கி அனுப்பமுடியுமா?
    முழு விரிப்புமறிய
    https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

    ReplyDelete