Saturday 7 May 2016

அடிசில் 99

குரக்கன்மா அடை 
- நீரா -


தேவையான பொருட்கள்: 
குரக்கன்மா  -  1 கப்
தேன்  -  ½ கப்
மென்மையான தேங்காய்ப்பூ  -  2  மே.கரண்டி
உப்பு  -  ½  சிட்டிகை
பூவரசம் இலை  -  20

செய்முறை: 
1.  ஒரு பாத்திரத்துள் தேனை ஊற்றி இளநெருப்பில் சூடாக்கவும்.
2.  தேன் இளகி தண்ணீர் போல மாறும் போது [குமிழ் தோன்றமுன்] தேங்காய்ப்பூவைச் சேர்த்துக் கலந்து கொள்க.
3.  அடுப்பில் இருந்து இறக்கி குரக்கன்மா சேர்த்து நன்றாக்க குழைத்து இருபது சிறு உருண்டைகளாகப் பிடித்துக் கொள்க.
4.  ஒவ்வொரு உருண்டையையும் ஒவ்வொரு இலையினுள் வைத்து, பாதியாக மடித்து அழுத்தி வைக்கவும். [அரை இலை வடிவில்]
5.  மாவுடன் இருக்கும் அழுத்திய இலைகளை ஆவியில் 10 - 15 நிமிடம் அவித்து எடுக்கவும்.

குறிப்பு:
பூவரசம் இலைக்குப் பதிலாக வாழை இலை, foil பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment