Tuesday 28 April 2015

ஆழி சூழ் கோணாசலம்

அருள்மிகு திருக்கோணேஸ்வர நாதர்
வணக்கப் பாமலர்
 இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன் - [எனது தந்தை]

கைலாச மலையமர்ந் துமைபாக மருவவே
       கருதுலகு காக்கு மையர்
காளத்தி யப்பனார் கண்ணப்பனார் செயும்
       கனபூசை ஏற்றுவ கைதந்தார்
பயிலாக மங்கூறு பக்திமுறை வழிநின்று
       பரவு சிவ கோசரிக்கு
பாதிநிசி கனவினில் திண்ணனார் இட்டவூன்
       பசிதீர்த்த தென்ற வமுதர்
மயிலான தேறியிவ் வுலகேழு வலமாயும்
       மாங்கனி பெறாது நொந்த
மைந்தனைப் பழநீ யெனக்கூறி யன்புடன்
       மார்போ டணைத்த எந்தை
அயிலான ஓங்கார விசைபாடி யடிபரவும்
       ஆழி சூழ் கோணாசலம்
அமர்ந்தருளி யிராவணற் கருள்பூத்த பரமசிவம்
அடியெமைக் காத்தருள் கவே!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment