Saturday 11 April 2015

மகனே! சிந்தை செய்திடுவாய்!!


குந்த நிலமுமின்றி மகனே - குடிக்க
கூழுக்கும் வழியுமின்றி
கந்தல் உடையுமின்றி மகனே - உடுக்க
கோவணம் கூடஇன்றி
காயும் வயிற்றுடனே மகனே - நடக்க
காலும் தானுமின்றி
சேயும் தானுமாய் மகனே - வாழ்வதை
சிந்தை செய்திடுவாய்!
                                            - சிட்டு எழுதும் சீட்டு 100

No comments:

Post a Comment