Friday 10 April 2015

அதிகாரி புலமேவு சிங்கார இள வழகனே!

புங்குடுதீவு மடத்துவெளி பாலமுருகன் வணக்கப் பாமலர்
- இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன் -

சங்கத் திருந்துதென் தமிழாய்ந்த புலவனே
  தமிழர்தொழு குல தெய்வமே
சகலகலை அறுபத்து நான்கும் சமைத்திட்ட
  சண்முகத் தொரு முதல்வனே
பொங்கு செல்வங்கண்டு பூரித்து சிவதொண்டு
  புரிகின்ற புண்ணியர் பதியாம்
பொன்கைநகர் வடபால் மடத்துவெளி நன்னி
  பக்தர்வாழ அருள் பெருமான்
அங்கத் திருந்திடும் அருநோய்கள் தீர்த்தெம்மை
  ஆண்டருள வேண்டி நின்றோம்
ஆறுபடை வீடமர்ந் தருள்புரியு திருவுருவொடு
  அடியரைக் காக்க வருவாய்
செங்கை வனவேடனாய் வள்ளிமலர் கண்டு
  சொக்கி மரமாகி நின்றாய்
செந்நெல் பொலியு மதிகாரி புலமேவு
          சிங்கார இள வழகனே!

No comments:

Post a Comment