Saturday 27 December 2014

ஆசைக்கவிதைகள் - 100

சோளக்கொல்லை 

வானாவாரி மண் உழுது
  புழுதி மணம் வீசவந்த
சோனாவாரி மழை நீரை
  பார்த்தெடுத்து விதைத்த
சோளவிதை முளைத்து நல்ல
  சோளக் கதிர் சாயயில
கிளியினங்கள் சிறகடிக்கும்
  மயிலினங்கள் கூத்தாடும்
சோளக்கொல்லை காண
  கண் கோடி வேணும் 
                                                                                  - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

குறிப்பு:
சொல்விளக்கம்    
வானாவாரி -  மழை நீரில் பயிர் செய்யும் நிலம். ஈழத்தமிழர் வானாவாரி என்பதை தமிழகத்தார் மானாவாரி என்பர்.
சோனாவாரி - சோ எனப் பெய்யும் மழை/ நீரை அள்ளி ஊற்றுவது போலப் பெய்யும் மழை
கொல்லை - வானாவாரிக் காடு/ மழையை நம்பி இருக்கும் நிலம்/ எள்ளு, கொள்ளு போன்ற தானியங்களை பயிரிடும் நிலம். 

No comments:

Post a Comment