Saturday 24 January 2015

மருதமலைத் தேன்


மருத மலைத்தேனை பார்த்தேன்
மன மகிழ துதித்தேன்

மருத மலைத்தேனை இரசித்தேன்
மறு ஜென்மம் எடுத்தேன்

முருகு அருட்தேனை சுவைத்தேன்
மன தேனில் குழைத்தேன்

உருகு மனத்தேனை குடித்தேன்
உள தேனில் புதைத்தேன்

கருத நினைத்தேனை அடைந்தேன்
கன் மவினை தொலைத்தேன்

No comments:

Post a Comment