Tuesday 16 December 2014

காக்கையோடு ஒப்பார்


முத்தி முத்தி என்றே முப்போதும் பேசிடுவார்
பக்தி சிறிதும் இன்றி பலகதை தாம்பகர்வார்
அத்திக் கருளிய அம்பிகை பாகன் என்பார்
சித்திக் கருளியவன் சேவடி போற்றும் என்பார்
உத்தி பலதும் செய்தெமை மகிழ வைப்பார்
கொத்தி திருடும் அந்த காக்கையோடு ஒப்பார்
முத்தி என்றே ஏய்திடும் மூடச் சாமிமாரே!
                                                              - சிட்டு எழுதும் சீட்டு 95

No comments:

Post a Comment