Tuesday 25 September 2012

அடிசில் 36

பால் கோவா

                                    - நீரா -















தேவவையான பொருட்கள்:
பால்  -  2 லீற்றர்
சீனி  -  200 கிராம்
ஏலக்காய் பொடி  -  1 சிட்டிகை
மிளகுப் பொடி  -  1 சிட்டிகை

செய்முறை:
1.  அடி கனமான அடிப்பிடியாத பாத்திரத்தில் பாலை ஊற்றி மெல்லிய சூட்டில் காச்சவும்.
2.  பால் அடிப்பிடியாது எந்நேரமும் துழாவவும்.
3.  மூன்றில் ஒரு பங்களவு பால் வற்றிவரும் பொழுது சீனியைச் சேர்த்து கிண்டவும்.
4.   யாவும் கரண்டியுடன் சேர்ந்து வரும் பொழுது ஏலக்காய், மிளகுப் பொடி சேர்க்கவும்.
5.  பாலில் உள்ள நெய் பிரிந்து வரும் போது இறக்கி விரும்பிய வடிவில் பிடித்தோ, வெட்டியோ எடுக்கவும்

குறிப்பு:
இதனை நம் முன்னோர் திரட்டுப்பால் என அழைத்தனர். பாலில் நெய் இருப்பதால் நெய் சேர்க்கத் தேவை இல்லை. வெண்ணெய் இல்லாத பாலானால் சிறிது நெய் சேர்க்கவும்.

No comments:

Post a Comment