Thursday 13 September 2012

உன்னை நினைந்திருந்தேன்



                          பல்லவி
என்னை மறந்தே என்றும்
உன்னை நினைந்திருந்தேன் - கந்தா!
                                               - என்னை மறந்தே
                        அனுபல்லவி
பன்னிரு அருள்விழி ஒளியும்
என்னை காக்குமென்றே - ஐயா!
                                               - என்னை மறந்தே

                          சரணம்
முன்னைத்தவம் செய்திடா மூர்க்கத்தால்
பின்னையான் செய்பிழை யாவுமிங்கே
முன்னைவினைப் பயனாய் மூண்ட தீயாய் 
சின்னத்தனங்கள் செய்து அழிவதற்கோ!
                                                - என்னை மறந்தே

No comments:

Post a Comment