பல்லவி
என்னை மறந்தே என்றும்
உன்னை நினைந்திருந்தேன் - கந்தா!
- என்னை மறந்தே
அனுபல்லவி
பன்னிரு அருள்விழி ஒளியும்
என்னை காக்குமென்றே - ஐயா!
- என்னை மறந்தே
சரணம்
முன்னைத்தவம் செய்திடா மூர்க்கத்தால்
பின்னையான் செய்பிழை யாவுமிங்கே
முன்னைவினைப் பயனாய் மூண்ட தீயாய்
சின்னத்தனங்கள் செய்து அழிவதற்கோ!
- என்னை மறந்தே
No comments:
Post a Comment