Friday 7 September 2012

விடிவெள்ளி வந்தேறுமா?


தீர்க்காத தீர்வெல்லாம் திண்டாடுது
          தினமேங்கி தமிழ்நெஞ்சம் புண்ணாகுது
நீர்க்கோலம் போன்ற நிலையானது
          நன்றென்றால் நாளை என்னாவது
ஊர்கோலம் காணவே மனமேங்குது
          உரிமைக்கு விடிவெள்ளி வந்தேறுமா
போர்கால மேகங்கள் புறம்போகுமா
          பொன்னான எதிர்காலம் உடனாகுமா
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment