Monday 3 September 2012

அடிசில் 34

சுண்டைக்காய் பிரட்டல் 
                                                       - நீரா -















தேவையான பொருட்கள்:
சுண்டைக்காய்  - 300 கிராம்
வெட்டிய வெங்காயம்  -  1
செத்தல் மிளகாய்  - 5
வெந்தயம்  -  2 தேக்கரண்டி
கடுகு  -  1 தேக்கரண்டி
சின்னச் சீரகம்  -  1 தேக்கரண்டி
புளி  - 15 கிராம்
கறிவேப்பிலை  -  கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு   
எண்ணெய்  - 1 மேசைக்கரண்டி

செய்முறை: 
1.  சுண்டைக்காய்களை நன்றாகாக் கழுவி தண்ணீர் இல்லாது காய்ந்ததும், கிரண்டரில் போட்டு ஒன்று இரண்டாக அரைத்துக் கொள்க.
2.  புளியை தண்ணீரில் ஊறவிட்டு கரைத்துக் கொள்க.
3.  செத்தல் மிளகாயையும் வெந்தையத்தையும் பொன்னிறமாக வறுத்து தூளாக, இடித்துவைக்கவும்.
4.  ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, சீரகம் கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் வெட்டிய வெங்காயத்தை இட்டு பொன்னிறமாக வதக்கவும்.
5.  அதனுள் நறுவல் துருவலாக அரைத்துள்ள சுண்டைக்காயை போட்டு வதங்க விட்டு, உப்பு சேர்த்து இளஞ்சூட்டில் வேகவிடவும். 
6.  வெந்ததும் கரைத்த புளியையும், இடித்த தூளையும் சேர்த்து எண்ணெய் பிரிந்து பிரட்டலாக வரும்பொழுது இறக்கவும்.

No comments:

Post a Comment