Monday 25 January 2021

கருணை செய்வாய் கந்தா




கருணை பொழியுமிரு விழிகள் திறந்தே

கருணை செய்வாய் கந்தா

அருணை யம்பதிதனில் அவுணர்க் கருளிய

அதிசயங் கண்டேன் முந்தா

பொருணைத் தமிழதை பொற்பினில் எழுதிய

பொறையிற் சிறந்ததே தெந்தா

தெருணை யற்றயென் தெய்வமே அருட்

தேனினை யென்னுட் சிந்தாய்

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment