Friday 7 April 2017

ஏழைகட்கு இரங்கு தயைவோடு!

முருகன் வேடத்தில் வள்ளி

வண்ணமயில் ஏறிவரு வடிவேலா
            வாழ்க்கை இதுவென்ன பலகோடு
கண்ணுமயில் அவள்றனை காத்திடு
            காதலால் என்றுமுன் அருளோடு
எண்ணமயில் மீதினில் அமர்ந்தே
            ஏழைகட்கு இரங்கு தயையோடு
பொண்ணுமயில் வள்ளிதன் மணாளா
           பாதம் பணிந்தேன் பரிவோடு 
இனிதே,
தமிழரசி.

1 comment: