Friday 15 May 2015

எனது 'ஆசைக்கவிதைகள்' பெறும் இலக்கியப்பரிசு

2014 ஆண்டு வெளியான சிறந்த நூல்களுக்கான 
இலக்கியப் பரிசுகளை 
கவிதை உறவு வழங்குகிறது 
'ஆசைக்கவிதைகள்' 
 புதுக்கவிதைக்கான முதலாவது பரிசைப் பெறுகிறது


மனித உள்ளம் என்னும் பாறையில் ஊற்றெடுத்து பாயும் அருவியே கவிதை எனலாம். நாட்டார் பாடல், நாட்டுப்புறப் பாடல், பாமரர் பாடல் என்றெல்லாம் கூறி இலக்கிய அறிஞர்களால் புறக்கணிக்கப்படுவது நாட்டுப்பாடல்கள். ஆனால் என் தந்தை பண்டிதர் ஆறுமுகன் அவர்களால் 1936 ஆம் ஆண்டில் இருந்து சேகரிக்கப்பட்ட நாட்டுப்பாடல்களுக்கு நான் விளக்கம் அளித்து 2014 ஆம் ஆண்டு வெளியிட்டேன். அந்த நாட்டார் பாடல்களுக்கு [ஆசைக்கவிதைகள்] புதுக்கவிதைகளுக்கான இலக்கியப் பரிசு கிடைப்பது இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனை என நினைக்கிறேன். 

கவிதை உறவு புதுக்கவிதைக்கான முதலாவது பரிசை நாட்டுப் பாடல்களுக்கு வழங்கி இலக்கிய உறவை விரிவாக்கி இருக்கிறது. அதற்காக ‘கவிதை உறவு’ ஏர்வாடி எஸ் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆசைக்கவிதைகள் நூலை சிறந்த புதுக்கவிதை நூலாகத் தெரிவு செய்த தெரிவுக்குழுவினருக்கும் எனது வாழ்த்து உரித்தாகுக.

இந்த நூலை வெளியிடுவதற்கு எனக்கு உறுதுணையாய் இருந்த  திரு திருமதி முருகானந்தா அவர்கட்கும் உறவினர்க்கும் நண்பர்க்கும், இந்நூலில் உள்ள படங்களைக் கீறித்தந்த என் அருமை மகள் [தங்கை மகள்] பிரதீபாவுக்கும், முன் அட்டைப் படத்தை தந்துதவிய இளங்கீரனுக்கும் இந்நூலை அச்சிட்டதோடு தெரிவுக் குழுவுக்கு அனுப்பியுதவிய ‘சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷ்ன்ஸ்’ கார்த்திகேயனுக்கும் எனது இனிய வாழ்த்தைக் கூறி மகிழ்கிறேன்.

கவிதை உறவு உலகெங்கும் ஓங்கி வளரட்டும்!

2 comments:

  1. நூல் எங்கு கிடைக்கும்?

    ReplyDelete
    Replies
    1. என்னிடமும், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸிலும் கிடைக்கும்.
      Sixthsense Publications, Police Quarters Road, Thiyagaraya Nagar, Chennai - 17
      email: sixthsensepub@yahoo.com
      Phone: 24342771

      Delete