Saturday 19 July 2014

காத்தருள்வாயே!



நோயிற் கிடந்து நோன்மை இழந்து
      நாளும் நாளும் நெஞ்சம் நொந்து
பாயிற் கிடந்து பாரோர் பகரும்
      பழிச்சொற் கேட்டுப் பதையா நிலையை
தாயிற் சிறந்த தயா நிதியே
      தருவாய் எனக்கே தத்துவ ஞான
சேயிற் சிறந்த செவ்வடி வேளே
      செங்கரம் தந்து காத்தருள்வாயே
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment