Friday 1 August 2014

தென்கயிலை மலை வள்ளலே!

திருக்கோணேஸ்வர நாதர்
வணக்கப் பாமலர்                   
             - இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன் - [எனது தந்தை]            

பொன்னழகி யாடக சவுந்தரி குளக்கோட்டன்
      பூசித் துவந்த பெருமான்
போகர்முதல் முனிவோர்கள் ஆகம விதிப்படி
      போற்றிசைப் பார்க ளென்றும்
அன்னமென் நடையம்மை வாமபாகம் மருவ
      அரியபத் மாசனத் தில்
அரியய னடிதொழ நவரத்ன பீடத்
      தமர்தருளு கோணா சலர்
அன்னைகைகசி லிங்கம் அரிசிமா விற்செய்து
      அர்ச்சித்த தற் குவந்து
அரியதிசை பத்தாண்ட இராவணே சனைமக
      னாகவீந் தருளு மையர்
தென்மொழித் தமிழ்மக்கள் உன்பத மடைக்கலம்
      செய்யபொற் றாள்துதித் தோம்
செல்வமுங் கல்வியும் நல்லரசு மீந்தருள்
      தென்கயிலை மலை வள்ளலே
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment