Saturday 5 July 2014

கூறிடுவீர் மானிடரே!






















கற்பனையின் சிகரத்தில் கவித்துவம் படைக்க
கையில்தூரிகை பிடித்த கலைஞன் இவன்
நற்றிணையில் காணா நயங்கள் எல்லாம்
நயப்புடன் தந்தான் நானிலத்தோர்க்கே

சிற்பமென இச்சித்திரம் சொல்லும் சேதியென்ன
சிந்தனையைச் செதுக்கி சிந்தியுங்கள் மானிடரே
பற்றெதுவும் இன்றிப் பாண்புடனே கேட்கின்றேன்
பறவைகள் செய்திட்ட பாவம் என்னவோ

வெற்று வெளியாய் வேரோடு மரம்சாய்த்து
வீதியென்றும் வீடுஎன்றும் வேண்டுவன கட்டுகின்றோம்
குற்றுயிராய் குலையுயிராய கூடின்றி குருவிகளிடும்
கூக்குரல் கேட்கலையோ கூறிடுவீர் மானிடரே

வற்றுநீருமின்றி காடின்றி விலங்கினம்வாட வக்கணையாய் 
விமான ஓடுபாதை வேடிக்கை வினோதமென
உற்றவுலகு எங்கணும் உல்லாசம் காணுகிறோம்
உணர்ச்சியின்றி எத்தனைநாள் உவந்திடுவீர் இவ்வாழ்வை

நற்றமிழர் நாமென்றால் நானிலத்திற்கு ஏதுசெய்தோம்
நாடென்ன நகரென்ன நட்டிடுவோம் நன்மரங்கள்
பொற்புடனே போற்றி பச்சைப்பசும் புல்வெளியில்
பறவைகளும் உலாப்போக பூயைக் காத்திடுவோம்
                                  
இனிதே,
தமிழரசி

No comments:

Post a Comment