Monday 9 November 2020

கொஞ்சிக்கொஞ்சி மகிழநின்றேன்



கொட்டமிடும் கோகிலங்கள்

கூவையிலே எழுந்திருந்தேன் 

மொட்டவிழ்ந்து பூவிரிய 

மனங்களித்துப் பார்த்திருந்தேன்

நெட்டநெடு மரமீதில்

நாகணவாய் பேசக்கேட்டேன்

வட்டமிடும் தோகைமயில்

வண்ணநட மாடக்கண்டேன்

கிட்டவந்த பச்சைக்கிளி

கொஞ்சிக்கொஞ்சி மகிழநின்றேன்

இனிதே,

தமிழரசி.


No comments:

Post a Comment