ஏங்கி அழலாமோ
ஏதிலர் போல் நீயுமெனை
எள்ளி நகைக்கலாமோ
நண்ணி நண்ணி நானும் அங்கு
நாயா யலையலாமோ
நோதிலர் போல் நீயுமெனை
நையப் புடைக்கலாமோ
துண்ணித் துண்ணி துவளும் நெஞ்சு
துன்பப் படலாமோ
தோதிலர் போல் நீயுமெனை
துவைத் தெடுக்கலாமோ
பண்ணி பண்ணி பாடும் உளம்
பாரம் சுமக்கலாமோ
பேதையர் போல் நீயுமெனை
பேண மறக்கலாமோ
இனிதே,
தமிழரசி.
சொல் விளக்கம்
ஏதிலர் - அயலவர்
எள்ளிநகைத்தல் - ஏழனம்
நண்ணி - அணுகி
நோதிலர் - கவலைப்படாதவர்
நையப்புடைத்தல் - வருத்துதல்
துண்ணி - பயந்து நடுங்குதல்
தோதிலர் - பொருத்தமில்லாதவர்
துவைத்தல் - மிதித்தல்
பண்ணி - புனைந்து
பேதையர் - அறிவிலாதவர்
பேண - காக்க
இசைப்பாக் கவிதை
ReplyDeleteசொற்சுவை
மகிழ்ச்சி
Delete