Photo: FB, Chandran
கண்கள் காட்டும் கனிவு கண்டே
காதல் நெஞ்சம் கரையுதெடா
எண்ணம் எதிலும் ஏக்க மில்லை
ஏழ்மை யுனைப் பார்தோடுமெடா
தண்ணென் றணைத்த நாய் அதுவும்
தாயாய் அன்பைப் பொழியுமெடா
விண்ணைத் தொட்ட புகழை எய்தி
வேண்டிய யாவும் நுகர்ந்திடெடா
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment