மட்டுநகர் வாவி[Photo: Wikipedia]
எட்டுத்திசையும் கொட்டுக மேளம்
ஏழ்கடலும் பொங்கி எழுந்திடவே
மட்டுநகர் வாவி வாழும்
மீனினமும் பாடிக் களித்திடவே
கட்டுக்கடங்கா நம் காளையரும்
காட்டிய மானம் செறிந்திடவே
எட்டாவுயரத் தோங்கு தமிழ்
எம்மவர் உயிருடன் கலந்திடவே
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment