Monday 9 November 2020

நேயத்தை உன்பால் வைத்தேன்!


நேயத்தை உன்பால் வைத்தேன்

நெஞ்சமே கோயிலாய் கொண்டாய்

காயத்தே நோய்கள் தீண்டி

கனலிடைக் கருகல் காணாய்

தேயத்தே வாழும் மாந்தர்

தொல்வினை தீர்த்து வைப்பாய்

மாயத்தை தொழிலாய்க் கொண்டாய்

மறந்திடல் அழகோ சொல்வாய்

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment