Monday 14 January 2019

வாழிய! தமிழென உரைப்பீரே!!



திங்கள் மும்மாரி பொழிந்திட
           தண்டலை மயில்கள் ஆடிட
பூங்குயிற் சோலையில் கூவிட
          குருகுகள் கொட்டம் அடித்திட

மாங்கன்று துள்ளிக் களித்திட
          மலையினில் அருவி பாய்ந்திட
பொங்கும் பூம்புனல் பெருகிட
          பச்சை செந்நெல் விளைந்திட

எங்கள் தேயமெழில் பூத்திட
          எங்கெங்கும் கல்வி வளர்ந்திட
உங்கள் செல்வங்கள் செழித்திட
          உள்ளமும் இன்பத்தில் திளைத்திட

தையிற் பொங்கும் தையலரே!
          தமிழின் சுவையை ஊட்டி
வையம் முழுதும் படைப்பீரே!
          வாழிய! தமிழென உரைப்பீரே!!
இனிதே,
தமிழரசி

No comments:

Post a Comment