Friday 18 January 2019

தெய்வவேல் தொடுத்தே!



மாயவலைப் பட்டழுந்தி யென்
          மனமுருகக் கற்றிலேன்
தூயதிருவடி தோய்வார் தம்
          தகைமை நினைத்திலேன்
ஆயககலை யறுபத்துநான்கும் நன்
          காய்ந்து அறிந்திலேன்
தீயகுணங்கள் தீய்த்தருள் உன்
          தெய்வவேல் தொடுத்தே!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment