Sunday 12 June 2016

தாள் பணிந்துய்யவே!


நாக ராஜ நாயகி
        நயினை மேவு பூரணி
பாக மேவு பரமனு
        பயிலு நாம பாரணி
ஆக மங்கள் யாவும்
        ஆகி நின்ற ஆரணி
மேக லைய தெய்வமு
        முருகி வேண்டு தாரணி
போக போக்கிய நாடு
        பக்தர் தேடு நாரணி
மோக ராக பாடலை
        மகிழக் கேட்குங் காரணி
சோக தேக நோயினை
         சீர்க்கு நல் சீரணி
தாக நீக்கு தையலே
        தாள் பணிந் துய்யவே!
இனிதே,
தமிழரசி.

1 comment:

  1. அருமையான பதிவு

    http://ypvn.myartsonline.com/

    ReplyDelete