Sunday 5 June 2016

அடிசில் 101

புளிக்கஞ்சி
- நீரா -
  

தேவையான பொருட்கள்: 
அரிசி  - ½ கப்
முள் நீக்கிய மீன் துண்டு -  5
வெட்டிய கத்தரிக்காய்  -  ½ கப்
வெட்டிய வாழைக்காய்  -  ½ கப்
வெட்டிய பயற்றங்காய்/ பீன்ஸ்  -  ½ கப்
கீரை  -  1  கைப்பிடி
வெட்டிய வெங்காயம்  - 1 மேசைக்கரண்டி
வெட்டிய உள்ளிப்பூடு  -  1 மேசைக்கரண்டி
வெட்டிய இஞ்சி  -  1 தேக்கரண்டி
வெட்டிய பச்சைமிளகாய்  -  1 தேக்கரண்டி
தேங்காய்ப்பால்  - ½  கப் 
மஞ்சள் தூள்  -  ¼  தேக்கரண்டி
மிளகாய்த் தூள்  -  ¾ தேக்கரண்டி
சீரகம்  -  ½  தேக்கரண்டி
மிளகு  -  ½  தேக்கரண்டி
மல்லி  -  1 தேக்கரண்டி
பழப்புளி  -  தேவையான அளவு 
உப்பு  -  தேவையான அளவு

செய்முறை:
1. அரிசியைக் கழுவி ஒரு பெரிய பாத்திரத்தில் இட்டு மூன்று கப் தண்ணீர் விட்டு வேகவிடவும்.
2. பழப்புளியை தண்ணீர்விட்டு கரைத்து வைக்கவும்.
3. உள்ளிப்பூடு, இஞ்சி, மிளகு, சீரகம், மல்லி யாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து வைக்கவும்.
4. அரிசி முக்கால் பதமாக வெந்ததும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மீன், மரக்கறிகள், வெங்காயம், பச்சைமிளகாய்  என்பவற்றோடு இரண்டு கப் தண்ணீரும் விட்டு துழாவி அவியவைக்கவும்.
5. யாவும் அவிந்ததும் அரைத்த கூடு, கீரை, தேங்காய்ப்பால், உப்பு, கரைத்துவைத்துள்ள புளியையும் சேர்த்து மீண்டும் தூழாவி தேவையானால் கொஞ்சம் தண்ணீரும் சேர்த்துத் துழாவிக் காச்சவும்.
6. கஞ்சி கொதித்ததும் இறக்கவும்.

No comments:

Post a Comment