Saturday 25 June 2016

பள்ளி எழுச்சி!


எழுந்திரடா மகனே எழுந்திரடா - என்
கண்மணியே நீ எழுந்திரடா
                                                  - எழுந்திரடா

ஏழ்கடல் முத்தாய் வந்தவனோ அன்றி
இமய மலை தந்த சந்தனமோ
வாழுனர் மகிழ வாசித்திடும் நல்ல
மாணிக்க வீணையாய் வாய்த்தவனோ
                                               - எழுந்திரடா

மாழை மணி வடிவானவனே என் வயிற்றில்
வளர்ந்து நிறைந்து ஓடி வந்தவனே
சொல்லுவார் சொல்லு கேழாதே கெட்ட
துட்டரை நன்கு அறிந்து கொண்டு
மெல்ல நிமிர்ந்து சிரித்துக் கொண்டு நீயும்
                                                - எழுந்திரடா

சோம்பல் உலகமெடா என் செல்வமே அது
சும்மா இருந்து சுகங்காண நிற்குது
ஆம்பல் மலர் போன்ற ஆணழகா என் அருந்தவமே
வீம்புகள்பேசிப் பழகாதே மேன்மை தெரிந்து 
மாம்பழம் பெறாத முருகனைப் போல் என்
வாழ்வில் மலர்ந்த செந்தாமரையே
                                                  - எழுந்திரடா

No comments:

Post a Comment