Friday 24 June 2016

மாட்சிமை பெறவும் வழியிலையோ!

பெண்ணே ஆக நின்றிங்கு
        பேசிடும் சொல்லைக் கேளாயோ!
உண்ண உணவும் நீரும்நல்கி
        உயிர்க் காற்றுந் தருகிறேன்
கண்ணே போலக் காத்திடா
        காடுகள் யாவும் அழிக்கின்றார்
மண்ணே மானுடர் மதியிதுவோ
        மாட்சிமை பெறவும் வழியிலையோ! 
இனிதே,
தமிழரசி. 

No comments:

Post a Comment