Friday 3 July 2015

தேனாய் மயக்கு தெடா!



















கொள்ளை கொள்ளும் குதலைமொழி
             காதினில் இனிக்கு தெடா
வெள்ளை உள்ளச் சிரிப்பலையோ
             வேதனையை போக்கு தெடா
கள்ளம் இல்லா கனிந்தநோக்கு
             காதலை பெருக்கு தெடா
தெள்ளு தமிழ் சொல்லழகு
              தேனாய் மயக்கு தெடா
                                                      - சிட்டு எழுதும் சீட்டு 105 
குறிப்பு:
எனது பேரன் மயன் வாய்விட்டு இரசித்துச் சிரிப்பதைப் பார்த்து அவனுக்கு 1/07/2015 அன்று எழுதிய பாடல் இது. என்னை பாட்டெழுதத் தூண்டிய சிரிப்பை படத்தில் காண்க.

No comments:

Post a Comment