Thursday 2 July 2015

தமிழர் தொழுகுல தெய்வமே!

அருள்மிகு திருக்கோணேஸ்வர நாதர்
வணக்கப் பாமலர்
- இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன் - [எனது தந்தை]

பஞ்சவடி இராமன் பதைத்திடச் சீதையைப்
       படர் சிறையிட்ட திறலோன்
பசுநிரை கவர்ந்துபோர்ப் பகைவரை அழைத்திடும்
       பண்டைமுறை யரசு செய்தோன்
அஞ்சுமற் றஞ்சுமெனுமத் திசைகள் முடிசூடி
       அகிலம் புரந்த சைவன்
ஆகாய மானந் தடுத்தஅக் கைலைமலை
       அதிரப் பெயர்த்த வண்ணல்
பஞ்சின்மெல் லடிமங்கை பங்கன் மகிழ்ந்திடப்
       பாவீணை செய்த புலவன்
பாரோர் புகழ்ந்திடும் இராவணே சற்கருள்
       பாலித்த கருணா கரன்
தஞ்சமென வுன்பதம் நம்பிப் பிடித்தனம்
       தந்தருள் சுதந்திர மையா
தரையுதிரு சருகிற்கு முயிரீயு சித்தனே
       தமிழர் தொழுகுல தெய்வமே 
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment