Friday 30 January 2015

அடிசில் 88

இனிப்பு நெல்லிக்காய்
- நீரா -      

தேவையான பொருட்கள்: 
நெல்லிக்காய்  -  500 கிராம்
சீனி  -  600 கிராம்
தண்ணீர் - 1 கப் 
வனிலா -  2 தேக்கதண்டி
உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:
1. நெல்லிக்காய்களை நீரில் கழுவி, ஒவ்வொரு நெல்லிக்காயின் மேற்றரப்பிலும் முள்ளுக்கரண்டியால் குத்தி ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பைத் தூவிக் கலந்து வைக்கவும்.
2. இன்னொரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை விட்டு, சீனியைப் போட்டு அடுப்பில் வைத்து காய்ச்சவும்.
3. பாகு கையில் ஒட்டும் பதமாக வரும்போது நெல்லிக்காய்களை அதற்குள் போட்டுக் கலக்கவும்.
4. பாகு மீண்டும் தண்ணித் தன்மை உள்ளதாக மாறிவரும்போது வனிலாவைச் சேர்க்கவும்.
5. தொடர்ந்து துழாவிக் காய்ச்சி பாகு தடித்த பாணிபோல் வரும் போது இறக்கவும்.
6. ஆறியபின்னர் காற்று போகமுடியாத ஈரமற்ற போத்தலில் போட்டு வைத்துப் பாவிக்கவும்.

No comments:

Post a Comment