Tuesday 11 March 2014

வள்ளியைக் கெஞ்சி மணந்தவண்டா!

நாளை என் தந்தை பண்டிதர் மு ஆறுமுகன் அவர்களின் 
 100வது பிறந்த தினம் ஆதலால் 
அவர் எழுதிப் பாடி மகிழ்ந்த கதிர்காமக் கந்தன் பாடல்

எங்கும் நிறைந்த இயற்கையெடா - தம்பி
எட்டாத எண்ணத்து இறுதியெடா
சங்கத் தமிழர் தம் வாழ்வினிலே - அன்று
தழைத்து வளர்ந்த தருமமெடா

உமையவள் தந்த முருகனெடா - பெரும்
ஓங்காரத்துள் ஒளியானவண்டா
இமயச்சரவணப் பொய்கையிலே - உல
கின்புறத் தோன்றிய மைந்தனெடா

ஆறுமுகம் கொண்ட பாலனெடா - பர
மானந்த வெள்ளத்திறுதியெடா
மாறுமுகம் கொண்ட சூரனுமே - அன்று
மாய மரம் தொட்ட வேலனெடா

மூவர்க்கும் மூத்த முதல்வனெடா - எங்கள்
மூவா முதல்வர் புதல்வனெடா
தேவர்கள் மாதை மணம் புரிந்தே - நற்
திருப்பரம் குன்றம் அமர்ந்தவன்டா

ஆணிப் பொன்னான கதிரமலை - அன்று
ஆண்டருள் நம்பீ மகளாய்
மாணிக்க கங்கையில் ஆடிமகிழ் - குற
வள்ளியைக் கெஞ்சி மணந்தவண்டா
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment