Wednesday 5 March 2014

அடிசில் 80

கொங்கனிச் சாம்பார்
- நீரா -

தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1 கப் 
முருங்கக்காய் - 1
சிறிதாக வெட்டிய பீன்ஸ் - 1 மே.கரண்டி
சிறிதாகவெட்டிய கரட் - 1 மே.கரண்டி
வெட்டிய தக்காளி - 1
மஞ்சள் தூள் - ½ தே.கரண்டி
கடுகு -  ½ தே.கரண்டி 
கறிவேப்பிலை - கொஞ்சம்
எண்ணெய் - பொரிப்பதற்கு

அரைத்தெடுக்கும் பொருட்கள்
கடுகு - 1 தே. கரண்டி
மல்லி -  ½ தே. கரண்டி
சீரகம் - ½ தே.கரண்டி
வெந்தயம் - ½ தே.கரண்டி
செத்தல் மிளகாய் - 4
தேங்காய்த்துருவல் - 1 மே. கரண்டி 
கடலைப்பருப்பு - 1 மே.கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை: 
 1. துவரம் பருப்பைக் கழுவி பிரசர் குக்கரில் இட்டு, அத்துடன் வெட்டிய முருங்கக்காய், மஞ்சள் தூள் சேர்த்து 4 கப் தண்ணீர் விட்டு [ 3 விசில்] அவித்து எடுக்கவும்.
2. இன்னொரு பாத்திரத்தில் கொஞ்சம் எண்ணெய்விட்டுச் சூடானதும் செத்தல் மிளகாய், கடலைப் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை இலேசாகப் பொரித்தெடுத்து அதே பாத்திரத்தில் மல்லி, வெந்தயம், சீரகம், கடுகு, தேங்காய்த்துருவல் சேர்த்து மணம்வர வறுத்து எடுக்கவும். 
3. இவற்றுடன் உப்புச் சேர்த்து அரைக்கவும்.
4. வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய்விட்டுச் சூடாக்கிக் கொதித்ததும் கடுகு போட்டு தாளித்து, வெடிக்கும் போது கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வெட்டிய பீன்ஸ், கரட், தக்காளி சேர்த்து வதங்கவிடவும்.
5. வதங்கியதும் அதற்குள் அரைத்த கூட்டைச் சேர்த்து வேகவிடவும்.
6. பீன்ஸ் வெந்ததும் அவித்து வைத்துள்ள முருங்கக்காய், பருப்புச் சேர்த்துக் கலந்து தேவையாயின் தண்ணீர் விட்டு கொதிக்கவிட்டு எடுக்கவும்.

No comments:

Post a Comment