Thursday 5 September 2013

பாடும் இன்பம் பார்த்திடப் போமோ!
















மாடுகள் ஆடுகள் மந்தைகள் யாவும்
தேடுவார் இன்றி தெருவினில் அலைய
காடுகள் அழித்து களனிகள் மேவி
நாடுகள் நகரங்கள் நானிலம் எங்கும்
வீடுகள் என்றே வேண்டிய மட்டும் 
கூடுகள் போலக் கட்டிடும் மனிதன்
வாடும் பயிரின் வனப்பும் அறியான்
சூடும் பூவின் சுகமும் அறியான்
ஏடும் எழுத்தும் எதற்கு என்றான்
தேடும் பொருளே தெய்வம் என்றான்
கூடும் வாழ்வை குலைத்து நகைத்தான்
ஆடும் உயிர்கள் அனைத்தும் வதைத்தான்
ஓடும் உயிர்கள் ஒன்றாய்ச் சேர்ந்து
நாடும் நட்பில் நன்றாய் இணைந்து 
தேடும் உணவை தம்முள் பகிர்ந்து
பாடும் இன்பம் பார்த்திடப் போமோ!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment