Wednesday 4 September 2013

ஆசைக்கவிதைகள் - 74



























பெண்: இளனிப் பருவத்திலே
                      இருந்தேன் குடிக்கவென்று
            களனியில் கைகழுவ
                      கந்தனவன் கற்பனையோ!

ஆண்: கற்பனையில் நான் மிதக்க
                     காரணம் நீ கற்பரசி
           அற்புதமாய் உனைக் கண்டால்
                     அடக்க மனம் நாடுதில்லை


பெண்: மண்ணுருசி நீ அறியாய்
                      மரத்துருசி நீ அறியாய்
            பெண்ணுருசி நீ அறியாய்
                      போடா பொடிப்பயலே!
                                            - நாட்டுப்பாடல் (விடத்தல் தீவு)
                                           (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)


No comments:

Post a Comment