Tuesday 15 March 2022

கனிந்ததேன் அறியேன்

 

வல்லவேல் முருகன் அவன்

  வண்ணமயில் மீதில் வந்தான்

சொல்லவே வார்த்தை இல்லை

  சோதி வடிவம் கண்டேன்

முல்லை முறுவல் காட்டி

  மோனத் தவத் திருந்தான்

கல்லை நிகர்த்த நெஞ்சம்

  கனிந்த தேன் அறியேன்

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment