முத்தமிழின் இலக்கணமாய்
மூதறிஞர் சொல்வளமாய்
நற்றமிழின் நாயகனாய்
நான்மறையின் நற்பொருளாய்
சொற்றமிழின் பொருளுரைத்தே
சற்குருவாய் ஆனவனை
பொற்றமிழில் பாட்டிசைத்து
பொற்புடனே போற்றுவமே
இனிதே,
தமிழரசி.
குறிப்பு:
சொல்விளக்கம்.
பொன்+தமிழ் = பொற்றமிழ்
பொற்பு - பொலிவு
போற்றுதல் - வணங்குதல்
No comments:
Post a Comment