Monday 25 October 2021

ஞாலமெலாம் நீயாகி



ஞாலமெலாம் நீயாகி நின்றவாறென்னே

ஞாயிற்றின் ஒளியாகி நயந்தவாறென்னே

காலமெலாம் கருவாகி களித்தவாறென்னே

காற்றினின் அசைவாகி கரந்தவாறென்னே

கோலமெலாம் உருவாக்கி கொடுத்தவாறென்னே

கனன்று எரியாகி கலந்தவாறென்னே

மூலமெலாம் முகிழ்வாகி முளைத்தவாறென்னே

மூலமாய் ஞாலமாய் மூண்ட காலகாலனே

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment