Thursday 21 October 2021

நீணிலத்தைக் காத்தருள்வாய்!


புன்மலமே போந்து நின்று

  புறங்காட்டி மதி மயக்க

எம்மலமே எமை ஆட்ட

  ஏங்கித் தவித் துழன்று

வன்மலமே வகுத்த வழிஇ

  வாழ்வதற்கா நாம் பிறந்தோம்

நின்மலனே நின் அருளால்

  நீணிலத்தைக் காத் தருள்வாய்

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment