Saturday 28 August 2021

தேரோடும் வீதியெல்லாம்


தேரோடும் வீதியெல்லாம் தேடவைத்தான்

  தேனூறும் தமிழிசை மாந்தவைத்தான்

யாரோடும் பகையிலா பழகவைத்தான்

  யானெனும் தன்மையை ஓடவைத்தான்

ஊரோடும் உலகோடும் வாழவைதான்

  ஊற்றெனவே தன்னருளை பாயவைத்தான்

கூரோடும் வேலனெனை எழுதவைத்தான்

  குமரையா என்றேஎ கூவவைத்தான்

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment